Tuesday, January 9, 2018

விளையாட்டை விடுவாய்!


சுப்பு தாத்தா வின் உருக்கமான இசையில், குரலில், அடானா ராகத்தில்... மிக்க நன்றி தாத்தா!
கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!
கீதாம்மா வின் இனிய குரலில், இன்னொரு ராகத்தில்... மிக்க நன்றி கீதாம்மா!

உலகேழும் படைத்தாயம்மா, அதிலுன்
மாயை தனை விதைத்தாயம்மா

உன் மாயா விளையாட்டில் சிக்கி விட்ட போதும்
உன்னடியைச் சிக்கெனவே பிடித்தேனே நானும்

உந்தன் விளையாட்டு எந்தன் வினையாகும்
எந்தன் வினையாவும் என்விதியின் துணையாகும்

விளையாட்டை விடுவாயம்மா, என்
வினையெல்லாம் அழிப்பாயம்மா

அம்மா என்றழைத்தேன் எனினும் இரங்காயோ?
துன்பம் எனை மறக்க துணை நீ புரியாயோ?

கண்ணீர் வழிந்தாலும் கருணை பிறவாதோ?
பன்னீரோ உனக்கு, பாசம் தெரியாதோ?

விளையாட்டை விடுவாயம்மா, என்

வினையெல்லாம் அழிப்பாயம்மா


--கவிநயா

No comments:

Post a Comment