Monday, March 12, 2018

அபிராமி !




கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

கடவூரில் அபிராமி வடிவானாய்
கடையேனுக்கும் அருளும் அற்புதத் தாயானாய்
(திருக் கடவூரில்)

அமிர்தகடேஸ்வரரின் அருகிருப்பாய்
அமிர்தமென அருள் மழையைப் பொழிந்திருப்பாய்
(திருக் கடவூரில்)

நதி போல என்னுள்ளம் அலைகிறதே
கடலுன்னைச் சேர மனம் விழைகிறதே
பட்டருக்காய் வந்த முழு மதியே, உன்னைப்
பற்றிக் கொண்டேன் என்றென்றும் எனக்கு நீயே கதியே
(திருக்கடவூரில்)


--கவிநயா

No comments:

Post a Comment