Monday, March 19, 2018

ஜகதாம்பிகே!



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

அம்மா என் தாயே, அம்பிகே
அன்றாடம் உனைப் போற்ற, அருள் ஜகதாம்பிகே
(அம்மா)

திசையெல்லாம் உந்தன் திருமுகம் காணுதம்மா
இசையால் உனைப் பாட உள்ளம் களித்தாடுதம்மா
(அம்மா)

உன்னை நினைந்துருகல் எந்தன் தவமாகும்
உன்னை தினந்தொழுதல் எந்தன் வரமாகும்
உந்தன் அருளாலென் உலகம் இயங்குதம்மா
உன்னைக் கணங்கூட மறவா தருளம்மா
(அம்மா)


--கவிநயா

No comments:

Post a Comment