Monday, November 12, 2018

அருட்பார்வை வேண்டும்



பாவங்கள் கரையவில்லையே, என்
கண்ணீரும் குறையவில்லையே
வினைகள் என்னை மறக்கவில்லையே
கருத்த வானம் வெளுக்கவில்லையே
(பாவங்கள்)

ஒன்றிருக்க ஒன்று வர
இரண்டிருக்க நான்கு வர
துன்பம் வந்து சேரச் சேரத் தாளவில்லையே
இதைத் தீர்க்கும் வழி என்னவென்று புரியவில்லையே
(பாவங்கள்)

உன்னருளை நாடி வந்தேன்
உனதடிகள் தேடி வந்தேன்
அன்னை உந்தன் அருட்பார்வை ஒன்று போதுமே, அது
பிள்ளை யெந்தன் வினை யாவும் வெந்து போகுமே
(பாவங்கள்)


--கவிநயா

No comments:

Post a Comment