Monday, November 19, 2018

வருவாயா?

அம்மா என்னருகில் வருவாயோ?
அளவில்லா அன்பைத் தருவாயோ?

தோளில் சாய்த்துக் கொள்வாயோ?
துயரம் ஏனோ என்பாயோ?
மார்பில் சேர்த்துக் கொள்வாயோ?
கூந்தல் கோதிச் சொல்வாயோ?

அம்மா என்னருகில் வருவாயோ?
அளவில்லா அன்பைத் தருவாயோ?

என் மனதில் வளர் ஜோதி, நீ
ஆதி சிவனில் பாதி
தேடி வந்தேன் நாடி, தினம்
உந்தன் புகழ் பாடி

அம்மா நீ அருகிருந்தால் போதும், என்
பிறவித் துன்பம் ஓர்நொடியில் சாகும்

உந்தன் சிறு பிள்ளை, உன
புகழ் பாடும் கிள்ளை
        உனையே கொழு கொம்பாய்
        நினைக்கும் கொடி முல்லை

உன் முகமே நினைவலையில் நீந்தும், அதைக்
காணக் காண மகிழ்ச்சி வெள்ளம் மோதும்


--கவிநயா


No comments:

Post a Comment