Monday, September 16, 2019

வழி காட்டுவாய்


வழி காட்டுவாய், உந்தன்
விழி காட்டுவாய்
கதி காட்டுவாய், எந்தன்
விதி ஓட்டுவாய்
(வழி)

உன்னை எந்தன் அன்னை என்றேன்
உள்ளத் தன்பை உனக்கே தந்தேன்
கண்ணாயிரம் கொண்ட என் தாயே
கண் திறக்கத் தாமதம் ஏனோ?
(வழி)

உந்தன் நாமம் சொன்னேனில்லை
உன்னை எண்ணித் துதித்தேனில்லை
யாகம், தியாகம் செய்தேனில்லை
தாய்க்கு சேவை செய்தேனில்லை

இருந்தும் உன்னை நாடுகின்றேன்
உன்னை எண்ணிப் பாடுகின்றேன்
உன்னை விட்டால் யாரெனெக்கு
அன்னை யன்றித் துணையெனக்கு
(வழி)


--கவிநயா

No comments:

Post a Comment