நாவில் நிலைத்த உன் நாமம்
நாளும் அழைத்தேன் நானும்
கண்ணில் நிலைத்த உன் வதனம்
அதனைப் பண்ணில் விதைத்தேன் நிதமும்
உரவை நிறுத்தித் தடுத்தாய்
யமனை எட்டி உதைத்தாய்
ரதிக்கு மதனை அளித்தாய்
அருளைப் பாலாய்க் கொடுத்தாய்
நீ அறியாயததும் உண்டோ?
உன் கருணைக்கு எல்லை உண்டோ?
இருக்கையை விட்டு எழுவாய்
உடனே ஓடி வருவாய்
இன்னும் தாமதம் ஏனோ?
உனக்கிது பெருமை தானோ?
அம்மா விரைவாய் வருவாய்
உன் மடியில் ஓர் இடம் தருவாய்!
--கவிநயா
No comments:
Post a Comment