Tuesday, October 15, 2019

துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி



துர்கை என்பார் லக்ஷ்மி என்பார் வாணி என்பாரே
மூன்று வடிவம் ஆன சக்தி அன்னை சக்தியே
காளி என்பார் கமலை என்பார் வேணி என்பாரே
மூன்று வடிவம் ஆன சக்தி அன்னை சக்தியே
(துர்கை)

துர்கையாகத் தோற்றம் கொண்டாள் துயரங்களைத் தீர்க்க
காளியாகத் தோற்றம் கொண்டாள் அசுர்ர்களை மாய்க்க
சூலமேந்தி வந்திடுவாள் பிள்ளைகளைக் காக்க
நீலியாக மாறிடுவாள் நீசர்களைத் தீய்க்க
(துர்கை)

பாற்கடலில் பிறந்து வந்தாள் அலைமகளாக, அந்தப்
பரந்தாமைனைக் கரம் பிடித்தாள் மணமகளாக
இல்லந்தோறும் வந்தருள்வாள் திருமகளாக, அவள்
எட்டுவடிவமாகி நின்றாள் எழில்மகளாக
(துர்கை)

நான்முகனின் நாவினிலே நாமகளானாள்
ஆயகலை அனைத்துக்கும் அவள் அரசியுமானாள்
வேதங்களின் வடிவம் அவள் வேத ரூபிணி, நல்ல
ஞான ஒளி நல்கிடுவாள் ஞான ரூபிணி
(துர்கை)



--கவிநயா

1 comment: