Tuesday, October 22, 2019

புவனேஸ்வரி


அண்டமெல்லாம் காக்கும் அன்னை புவனேஸ்வரி
ஆனந்த பைரவி, ஆதி பரமேஸ்வரி
(அண்டமெல்லாம்)

அத்தனுடன் இருப்பாள், முக்தியினைக் கொடுப்பாள்
பக்தியுடன் ஞானம், பணிந்தவர்க்(கு) அவள் அளிப்பாள்
(அண்டமெல்லாம்)

தேவரும் மூவரும் அவள் பதம் பணிய
வேதங்கள் யாவையும் அவள் திருப்புகழ் மொழிய
தேனெனும் இன்னிசை திசையெங்கிலும் பொழிய
தொழுதிடும் அடியவர் விழிகளில் நீர் வழிய
(அண்டமெல்லாம்)

--கவிநயா

No comments:

Post a Comment