Monday, December 2, 2019

ஒரு சேதி



நாளும் உனை நினைந்தேன்
பாடல் பல புனைந்தேன்
அம்மா என் குரல் கேளாயோ, கடைக்
கண்ணால் என் திசையில் பாராயோ

கோடானு கோடிப் பிள்ளை
பெற்றெடுத்த என் தாயே
பாடாய்ப் படும் பிள்ளை பாராயோ, உன்
கண்ணால் ஒரு சேதி கூறாயோ

ஆனைமுகன் ஒருபிள்ளை
ஆறுமுகன் ஒருபிள்ளை
நானும் உந்தன் பிள்ளைதானே மறந்தாயோ, உன்
கண்ணால் ஒரு சேதி கூறாயோ

தேவர்களைக் காக்க வந்தாய்
துர்கையாகத் தோற்றம் கொண்டாய்
தேடித் தேடி வாடும் எனைப் பாராயோ, உன்
கண்ணால் ஒரு சேதி கூறாயோ

வாலைக் குமரியளே
வஞ்சி லலிதாம்பிகையே
வண்ணத் தமிழ்ப் பாடல் கேட்டு வாராயோ,உன்
கண்ணால் ஒரு சேதி கூறாயோ



--கவிநயா

2 comments: