Monday, April 20, 2020

மூகாம்பிகே

கொல்லூரில் குடி கொண்ட மூகாம்பிகே
என்னுள்ளம் குடி கொள்ள வா அம்பிகே
(கொல்லூரில்)

முப்பெருந் தேவியரின் ஓருருவாக வந்தாய்
மூவரும் முனிவரும் தேவரும் போற்ற நின்றாய்
லிங்கத் திருமேனியிலே ஸ்வர்ண ரேகையாக வந்தாய்
இரண்டில்லை ஒன்றெனக் காட்டும்படியாக நின்றாய்
(கொல்லூரில்)

கலைகளின் நாயகி, காக்கின்ற தேவி நீ
காற்சதங்கை கொஞ்ச பின்னே வந்த வாணி நீ
சங்கரற் கருளிய சங்கரி நீ அம்மா
எங்களுக்கும் அருளிட மனம் வைத்து வா அம்மா
(கொல்லூரில்)


--கவிநயா

No comments:

Post a Comment