Tuesday, April 28, 2020

வா வா!



காற்சதங்கை கிணுகிணுக்க கண்மணியே வாவா
பூம்பாதச் சிலம்பொலிக்க பூவிழியே வாவா
அம்மா என்றாசையுடன் அழைக்கின்றேன் வாவா
கண்ணே என்றரவணைக்க கற்பகமே வாவா

பட்டாடை சரசரக்க பைங்கிளியே வாவா
சிற்றாடை சிலுசிலுக்க சின்னப் பெண்ணாய் வாவா
முத்தாரம் மார்பசைய முத்துப் பெண்ணே வாவா
முத்தமிழால் அழைக்கின்றேன் முக்கண்ணியே வாவா

அன்னப் போல நடை நடந்து அஞ்சுகமே வாவா
சுவர்ணம் போல ஒளிரும் எழில் சுந்தரியே வாவா
இருள் அகற்றி ஒளி கூட்ட கதிரவனாய் வாவா
மருள் விரட்டி வழி காட்ட குரு வடிவாய் வாவா

உன்

பாதத்தூளி பட்டால் பல புவன்ங்கள் பூக்கும்
பாதத்தூளியின் மகிமை முத்தொழில் காக்கும்
பாதத்தூளி சிவனாரின் திரு நீறாகும்
பாதத்தூளியின் துளியால் இந்தப் பிறவியும் தீரும்



--கவிநயா

No comments:

Post a Comment