Monday, May 25, 2020

நான்


நான் என்னும் அகங்காரம்

இல்லாமல் செய்திடுவாய்

நான் தொலைந்து நீ வரவே

தாயே நீ அருள் புரிவாய்

 

நான் என்னும் பேயாடும்

என் மனமாம் இடுகாடு

நீயாடும் பூவனமாய்

ஆகிடவே அருள் புரிவாய்

 

காசியிலே காதினிலே

ஓதுபவன் பத்தினியே

காசினியைக் காப்பவளே

கண் திறந்து பாரம்மா

 

ஊர் சுற்றும் என்றன் உள்ளம்

உன்னிடத்தில் நிலை பெறவே

உன் பாதம் சரணடைந்தேன்

உமையவளே கா அம்மா



--கவிநயா

No comments:

Post a Comment