Monday, May 4, 2020

நீதான் துணை



உன் பாதம் போற்றுகின்றேன் உமையவளே
உனையன்றி இனியெனக்குத் துணையெவரே?
(உன்)

பனி மலையில் இருக்கும் பார்வதியே
பனியெனத் துயர் விலக்கும் பகலவன் நீயே
(உன்)

இடத்தினில் இருக்கும் உமையவளே
            என் உளத்தினில் வருவாயோ?
கரத்தினில் அபயம் தருபவளே
            கரம் கொடுத் தருள்வாயோ?
சிரத்தினை உன்றன் பதத்தினில் வைத்தேன்,
            பதமலர் தா அம்மா
விரைந்தெனக் கருள இடபத்தில் ஏறி
            சிவனுடன் வா அம்மா
(உன்)


--கவிநயா

No comments:

Post a Comment