Tuesday, September 1, 2020

சேற்றில் செந்தாமரை

 


உள்ளச் சேற்றினிலே ஊன்றி நிற்பவளே

உள்ளொளிரும் ஒளியே, உமையவளே

(உள்ளச்)

 

கள்ளமில்லா உள்ளம் தந்திடு தாயே

செந்தமிழால் உன்னைப் புகழ்ந்திட அருள்வாயே

(உள்ளச்)

 

பள்ளந்தனை நோக்கி ஓடிடும் நதி போல

உள்ளம் உன்னை நோக்கி ஓடிவர வேணும்

திசையறி கருவி என்றும் வட திசை காட்டுதல் போல்

என் மனம் என்றும் உன் திசை காட்டிட வேணும்

(உள்ளச்)


--கவிநயா

No comments:

Post a Comment