Monday, November 23, 2020

கதி நீயே


 

மதி முக எழிலே

பதி சிவன் துணையே

கதி என வந்தேன் பாரம்மா

என் கதை என்ன இங்கு கூறம்மா

(மதி)

 

வருவதும் போவதும்

அறிந்தவள் நீயே

திரை மறைவினில் இருந்து வா அம்மா

விரைவினில் உனதருள் தா அம்மா

(மதி)

 

பிறப்பிலும் இறப்பிலும்

எந்நிலை இருப்பிலும்

உன் நினைவொன்றே தா அம்மா

உன் நாமம் செந்தேனம்மா

 

முதலிலும் முடிவிலும்

அதனிடை நடுவிலும்

நிலைத்திருப்பவளே நீ அம்மா

எங்கும் நிறைந்திருப்பவளும் நீ அம்மா

(மதி)


--கவிநயா


No comments:

Post a Comment