Monday, November 2, 2020

கண்மணி வருக

 

கண்மணி உமையே

            கண்ணெதிர் வருக

கவின்மிகு சிவையே

            கருத்தினில் ஒளிர்க

(கண்மணி)

 

 

ஒரு முறை பார்க்க

            ஒரு வரம் கேட்க

சிறு இதழ் நெளிவினில்

            குறு நகை கோக்க

இவள் என் மகளென

            அன்புடன் நோக்க

இனி நான் துணையென

            இன்பத்தை வார்க்க

(கண்மணி)

 

 

பழ வினை நீக்க

            வரு வினை போக்க

கலி பயம் தீர்க்க

            களி நகை பூக்க

இவள் என் மகளென

            அன்புடன் நோக்க

இனி நான் துணையென

            இன்பத்தை வார்க்க

(கண்மணி)



--கவிநயா



No comments:

Post a Comment