Tuesday, December 8, 2020

ஆயி மகமாயி


 ஆடி வந்தோம் பாடி வந்தோம்

ஆத்தா ஒன்ன தேடி வந்தோம்

ஆயி மகமாயி கொஞ்சம் கண் பாரம்மா

நீ பாத்தாலே எறங்கி விடும் என் பாரம் மா

 

சூரக் காத்துப் போல

சுத்தும் ஒலக வாழ்க்க

யாரப் போயிப் பாக்க

ஒம் பாதந்தானே காக்க

ஆயி மகமாயி கொஞ்சம் கண் பாரம்மா

நீ பாத்தாலே எறங்கி விடும் என் பாரம் மா

 

சூளயிலே இட்டது போல்

வெனகளெல்லாம் சுடுதே

பாளயத்து ஆத்தா

ஒம் பார்வ பட்டா விடுதே

நீலி திரிசூலி கொஞ்சம் கண் பாரம்மா

நீ பாத்தாலே எறங்கி விடும் என் பாரம் மா

 

வேண்டாத நெனப்பெல்லாம்

வேதனயத் தருதே

சஞ்சலத்தில் விழுந்த மனசு

அலஞ்சு பட்டு அழுதே

ஆயி மகமாயி கொஞ்சம் கண் பாரம்மா

நீ பாத்தாலே எறங்கி விடும் என் பாரம் மா



--கவிநயா



No comments:

Post a Comment