Monday, March 15, 2021

தத்தித்தோம்

 

தத்தித்தோம் தகதித்தோம் என்று ஆடவா

தந்தனத்தோம் தாளஞ் சொல்லிப் பாட்டுப் பாடவா

(தத்தித்)

 

சிந்தித்தே உன்றன் நாமம் என்றும் ஓதவா

வந்தித்தே உன்றன் பாதம் சென்னி சூடவா

(தத்தித்)

 

செந்தமிழில் உன் புகழைப் பாட வேணுமே

நொந்தமனங் குளிர உன்னை நாட வேணுமே

சொந்தமெல்லாம் நீயென்று உணர வேணுமே

சிந்தையெல்லாம் நீ மட்டும் நிறைய வேணுமே

(தத்தித்)



--கவிநயா


No comments:

Post a Comment