Monday, March 29, 2021

உன்னை நம்பி...

 

உன்னை நம்பி இந்த

உலகினில் வாழ்கின்றேன்

கண்மணியே தாயே

கருத்தினில் வருவாயே

(உன்னை)

 

நீயே கதியென்று

உன்னைத் தேடி ஓடி வந்தேன்

தாயே நீ காப்பாய்

என்று உன்னை நாடி வந்தேன்

(உன்னை)

 

பனித்த சடை ஈசன்

பக்கத்தில் இருப்பவளே

கருத்த விடம் நிறுத்தி

கணவனைக் காத்தவளே

 

சீறி வரும் சிம்மத்தில்

ஏறி வரும் தேவியளே

கூறி வரும் உன்மகளை

மாரில் அணை மலைமகளே

(உன்னை)



--கவிநயா


No comments:

Post a Comment