Monday, March 8, 2021

ஆட்கொண்டருள்வாய்

 

ஆட்கொண்டருள்வாய் அம்பிகையே

பூக்கொண் டுனையே பூசித்தேன் உமையே

(ஆட்கொண்டருள்வாய்)

 

நாளும் உன் நாமம் நாவினில் தேனாக

வாழும் வாழ்வெல்லாம் உன்திருப் பணியாக

(ஆட்கொண்டருள்வாய்)

 

நாடும் துன்பங்கள் நொடியினில் தூசாக

தேடும் பொருள் யாவும் தேவியுன் பதமாக

பாடும் பண்ணெல்லாம் உன் திருப்புகழாக

வாடும் என்னிதயம் நீ தங்கும் வீடாக

(ஆட்கொண்டருள்வாய்)



--கவிநயா


No comments:

Post a Comment