Tuesday, February 8, 2022

சரணம் அம்மா

 



சரணமடைந்திட்டேன், ஷண்முகன் தாயே கேள்

(சரணம்)

 

உயிருடல் உனதாக, உள்ளமுன் வசமாக

உன் பதம் நிழலாக, உனதருள் எனதாக

(சரணம்)

 

பக்தரெல்லாம் போற்றும் பராசக்தியே அம்மா

சித்தரெல்லாம் போற்றும் சிவசக்தியே அம்மா

தாயென உனை அழைத்தேன், சேயெனை மறந்தாயோ?

வாயென அணையாயோ? வந்தருள் புரியாயோ?

(சரணம்)

 

--கவிநயா



No comments:

Post a Comment