Tuesday, September 23, 2014

ஏனிந்தப் பாராமுகம் ?





ஏனிந்தப் பாராமுகம் ?


ஓயாமல் ,"அம்மா ! அம்மா !"
                எனக்கூவி அழைத்திருப்பேன்,
தாயுந்தன்  திருவடியை 
                 உடும்பாகப் பிடித்தபடி .
                 .
வாஞ்சையும் , தாயன்பும் 
                    ஆதரவும் , அரவணைப்பும்
நோஞ்சான் பிள்ளைக்கே அதிகத்
                    தேவையன்றோ தாயே ?
ஞானத்தில் நோஞ்சானாய்
                  நான் நலிந்து கிடக்கையிலே
 ஏனிந்தப் பாராமுகம் 
           என்றுனை நியாயம் கேட்க ,
ஓயாமல் "அம்மா ! அம்மா !"
                எனக்கூவி அழைத்திருப்பேன்,
தாயுந்தன்  திருவடியை 
                 உடும்பாகப் பிடித்தபடி .



பிழை கண்டால் குழந்தை எனைக்
           குட்டிவிடு ,குனிந்திடுவேன்;
தவறு கண்டால் தகுந்ததொரு 
           தண்டனை தா,தாங்கிடுவேன்.
மரணத்தினுங் கடுமையான 
             கொடுந்தண்டனையாமுந்தன் 
மௌனத்தால் தண்டித்தல்
            முறையோ என்றுனைக் கேட்க,
ஓயாமல் "அம்மா ! அம்மா !"
                எனக்கூவி அழைத்திருப்பேன்,
தாயுந்தன்  திருவடியை 
                 உடும்பாகப் பிடித்தபடி .






No comments:

Post a Comment