Thursday, September 25, 2014

நவராத்திரி நாயகிக்குப் பாமாலை


நவராத்திரி நாயகிக்குப் பாமாலை 


வண்ணத்தமிழ் மலர்ச்சோலையிலே 
அன்புத்தமிழ்ப் பூஞ்சொல் பறித்து ,
இன்பத்தமிழ்ப் பண்ணால் தொடுத்து ,
அன்னைக்குப் பாமாலை சாத்திடுவோம் .


[1] துர்க்கையாய்த்  தாயை அலங்கரிப்போம் .
     சொர்க்கமாய்  வாழ்வில் சுகந்தருவாள் .
     துஷ்டரை  மாய்க்குந்திறமருள்வாள் .
     கஷ்டங்கள் யாவுங் களைந்திடுவாள் .
வண்ணத்தமிழ் மலர்ச்சோலையிலே 
அன்புத்தமிழ்ப் பூஞ்சொல்  பறித்து ,
இன்பத்தமிழ்ப் பண்ணால் தொடுத்து ,
அன்னைக்குப் பாமாலை சாத்திடுவோம் .


[2]லக்ஷ்மியாய்  அன்னையை அலங்கரிப்போம் .

    அக்ஷய பாத்திரமாய்  அளித்திடுவாள் .
   செல்வவளத்தோடு  பாரியென 
   வள்ளல்குணமும்  நமக்கருள்வாள் .
வண்ணத்தமிழ் மலர்ச்சோலையிலே 
அன்புத்தமிழ்ப் பூஞ்சொல் பறித்து ,
இன்பத்தமிழ்ப் பண்ணால் தொடுத்து ,
அன்னைக்குப் பாமாலை சாத்திடுவோம் .


[3]வாணியாய்த்  தேவியை அலங்கரிப்போம் .
    ஞானம் தந்து  மருள் நீக்கிடுவாள்.
    கலைகளில்  வல்லவராக்கிடுவாள் .
    நலமான வாழ்வினை நமக்கருள்வாள் .
வண்ணத்தமிழ் மலர்ச்சோலையிலே 
அன்புத்தமிழ்ப் பூஞ்சொல் பறித்து ,
இன்பத்தமிழ்ப் பண்ணால் தொடுத்து ,
அன்னைக்குப் பாமாலை சாத்திடுவோம் .

No comments:

Post a Comment