Monday, September 1, 2014

உனையன்றி எவருண்டு?


மிகப் பொருத்தமான ராகத்தில் மிக இனிமையாக சுப்பு தாத்தா பாடியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



உறவென உனைக் கொண்டேன் உமையவளே
உரவுண்ட கண்டனுக்கு இமையவளே
(உறவென)

உறவுகள் பலவற்றை உலகினில் நீ தந்தாய்
ஒவ்வொன்றும் நீயாகி உள்நின்று அன்பு செய்தாய்
(உறவென)

பலதாய் கருவினில் பலப்பலவாய்ப் பிறந்தேன்
ஒரு தாய் என்றென்றும் நீயெனெவே உணர்ந்தேன்
என்தாய் உன் பதங்கள் முழுதாய் சரணடைந்தேன்
எனதாய் உனை நினைந்து தினந்தினமுந் தொழுதேன்
(உறவென)


--கவிநயா

No comments:

Post a Comment