Tuesday, September 30, 2014

நவராத்திரி நாயகி !





நவராத்திரி நாயகி !


நவராத்திரி நாயகி !உன்னை நாடி வந்தோம் .
புவனேஸ்வரி !உந்தன் புகழ் பாடவந்தோம் .
துட்டரைத்துணிக்கும்  துர்க்கையாய்ப் போற்றித் 
துதித்துத் தாயுன்னைக் கொண்டாடவந்தோம் .


பண்டகனாம்  குரோத வடிவான  அசுரனைக் 
சங்காரித்தவளே !லலிதா திருபுரசுந்தரி  !
அஞ்ஞான அந்தகார வடிவான அசுரனாம் 
பந்தகனைத்துணித்த  காஞ்சி காமாட்சி !
நவராத்திரி நாயகி !உன்னை நாடி வந்தோம் .
புவனேஸ்வரி !உந்தன் புகழ் பாடவந்தோம் .
துட்டரைத்துணிக்கும்  துர்க்கையாய்ப் போற்றித் 
துதித்துத் தாயுன்னைக் கொண்டாடவந்தோம் .


மகிடாசுரனை மர்த்தனம் செய்தவளே !
மகேஸ்வரி !அன்னையே!அகிலாண்டேஸ்வரி !
தயாபரி ! தாயே ! மலைமகளே !மாயே !
ஜெயஜெய,ஜெயஜெய ஜெகதீஸ்வரி !
நவராத்திரி நாயகி !உன்னை நாடி வந்தோம் .
புவனேஸ்வரி !உந்தன் புகழ் பாடவந்தோம் .
துட்டரைத்துணிக்கும்  துர்க்கையாய்ப் போற்றித் 
துதித்துத் தாயுன்னைக் கொண்டாடவந்தோம் .

No comments:

Post a Comment