Monday, December 26, 2016

அன்னை நீ அருள வேணும்!



கீதாம்மாவின் உருகும் குரலில் மிக்க நன்றி அம்மா!

உன் பாதம் தேடி ஓடி வர வேணும்

அன்னை நீ அருள வேணும்

உன் பெயரை தினமும் நான் ஜெபிக்க வேணும்

அன்னை நீ அருள வேணும்



நாமம் ஜெபிக்கையில் நெஞ்சம் உருகணும்

அன்னை நீ அருள வேணும்

நெஞ்சம் உருகிக் கண்ணில் கண்ணீர் பெருகணும்

அன்னை நீ அருள வேணும்



சுவாசக் காற்றிலுந்தன் நினைவு கலக்கணும்

அன்னை நீ அருள வேணும்

வாசமலராயென் மனதில் மணக்கணும்

அன்னை நீ அருள வேணும்



பேசும் பேச்செல்லாம் நீயாய் இருக்கணும்

அன்னை நீ அருள வேணும்

வீசும் தென்றலாய் என்னைத் தழுவணும்

அன்னை நீ அருள வேணும்



செய்யும் செயலெல்லாம் உனக்காய் ஆகணும்

அன்னை நீ அருள வேணும்

பெய்யும் மழை போலக் கருணை பொழியணும்

அன்னை நீ அருள வேணும்


--கவிநயா 


1 comment: