Monday, October 22, 2018

மஹாலக்ஷ்மி!



மாமலர் மீதமர்ந்த மாலக்ஷ்மியே
மாதவன் மார்பொளிரும் ஸ்ரீலக்ஷ்மியே
(மாமலர்)

வறுமையெல்லாம் தீரும், உன்திரு முகம் கண்டால்
செல்வமெல்லாம் சேரும், உன்கடைப் பார்வை கொண்டால்
(மாமலர்)

சங்கரர் பாடலுக்கு (தங்க)நெல்லிக் கனி தந்தாய்
ஏழையும் பாடுகிறேன், எனக்கென என்ன தருவாய்?
செல்வங்கள் யாவற்றுக்கும் அதிபதி நீயாவாய், உன்
கருணைச் செல்வம் தனைத்தந்து எனையாள்வாய்
(மாமலர்)



--கவிநயா


No comments:

Post a Comment