Monday, October 29, 2018

நான்முகன் நாயகி


அன்னம் போல் நடையழகு
அல்லி மலர் நகையழகு
அந்தி மதி முக அழகு
அன்னையவள் பேரழகு
(அன்னம்)

கரத்தினில் ஜபமாலை 
மறுகரத்தில் வேதங்களாம்
அன்னை பதம் துதிப்பவர்க்கு
மனதில் இன்ப கீதங்களாம்
(அன்னம்)

நான்முகன் நாவினிலே
நான்மறையாய் ஒலித்திருப்பாள்
நம்பித் தொழும் பக்தருக்கு
ஞான ஒளியா யிருப்பாள்

வெள்ளைக் கலை யுடுத்தி
வீணையினை மீட்டிடுவாள்
பிள்ளை போல் அன்பு செய்தால்
பேரருளைப் பொழிந்திடுவாள்
(அன்னம்)


--கவிநயா


No comments:

Post a Comment