Tuesday, May 24, 2022

தஞ்சம் நீயே

தஞ்சம் என்று வந்தேன் அம்மா

அஞ்சேல் என்று சொல்வாய்

கஞ்சம் உன்றன் பாதம் என்றன்

நெஞ்சின் மீதில் வைப்பாய்

(தஞ்சம்)

 

வா எனவே அழைத்த பின்னும்

வாராயோ தாயே

தா எனவே கேட்ட பின்னும்

தாராயோ நீயே

(தஞ்சம்)

 

உலகம் உனக்கு விளையாட்டு

உயிர்களெல்லாம் பொம்மை

கலங்கச் செய்யும் உலகமிது

எனக்கிதுவே உண்மை

 

கரம் கொடுத்துக் கரை சேர்க்க

வரவேண்டும் தாயே

சிரம் மீதில் பதம் சூடும்

வரம்வேண்டும் தாயேன்

(தஞ்சம்)

 

--கவிநயா



 

No comments:

Post a Comment