Tuesday, May 31, 2022

காத்திருக்கிறேன்

 

வாசற் கதவைத் திறந்து வைத்தேன் வந்து பாரம்மா, பூ

வாசம் என்றன் உள்ளத்திலே வீச வையம்மா

(வாசல்)

 

பாசம் வைத்து நானழைத்தேன் காதில் விழலையோ?

நேசம் வைத்து நீவர எந் நேரம் ஆகுமோ?

(வாசல்)

 

துணிவு வேண்டும் அம்மா உலகின் துயரம் தாங்கவே

பணிவு வேண்டும் உன்றன் மலர்ப் பாதம் பணியவே

கனிவு வேண்டும் உயிர்களிடத்தில் அன்பைப் பொழியவே

இவை அனைத்தும் வேண்டும் உனக்குப் பிடித்த பிள்ளையாகவே

(வாசல்)

 

--கவிநயா



No comments:

Post a Comment