Tuesday, September 15, 2020

இமயத்தில் இருப்பவளே!

 


இமயத்தில் இருப்பவளே என்றன்

இதயத்தில் வருவாயே

சமயத்தில் காப்பவளே என்னிடம்

சடுதியில் வருவாயே

 

உலகத்தில் ஓர்துணையும் இன்றி

உழலுகின் றேனம்மா

நிகளத்தின் பிடியினிலே சிக்கிவ்

சுழலுகின் றேனம்மா

 

இருப்பது மெய்யானால் அம்மா

இக்கணம் வருவாயே

மறுப்பெது மில்லாமல் உன்றன்

தரிசனம் தருவாயே


--கவிநயா


No comments:

Post a Comment