Monday, September 7, 2020

நதியோடு...

 

நதியோடு ஜதி போட்டு

நாட்டியத்தில் நடை போட்டு

கொடியிடையாள் உன்னை நானும்

கொஞ்சிப் பாட வந்தேனம்மா

(நதியோடு)

 

குக்குக்கூ குயிலொன்று

கூவி ராகம் சொல்லித் தர

மீனாள் கைப் பைங்கிளி வந்து

பைந்தமிழில் பாடித் தர

(நதியோடு)

 

நந்தி தேவன் மத்தளம் கொட்ட

கலைவாணி வீணை மீட்ட

கோபாலன் குழலின் ஓசை

காற்றினிலே மிதந்து வர

 

முனிவரெல்லாம் மறைகள் ஓத

கணங்களெல்லாம் நடனம் ஆட

தேவரெல்லாம் பணியும் உன்றன்

தங்கப் பாதம் தஞ்சம் அடைந்தேன்

(நதியோடு)


--கவிநயா


No comments:

Post a Comment